நைஜீரியாவில் ஆரம்ப பாடசாலை ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் 07 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 20 சிறுவர்கள் உடல் கருவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் நியாமியில் உள்ள இந்த ஆரம்ப பாடசாலை கட்டடங்கள் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட குடிசைக்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென வைக்கோலால் வேயப்பட்ட வகுப்பறைக்கள் தீப்பற்றி எரிந்தன.
தீ மள-மளவெனப் பரவியதால் பல மாணவர்கள் தப்பியோட முடியாது வகுப்பறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அதற்கிடையில் தீயில் கருகி 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிக காற்றே இந்தத் தீப்பரவைலுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.